" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

07/01/2011

                                                                                                                               
                                                                                      page2
               மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை                               கடவுளின் அளவுகோல் என்பது...
             எத்தனை முறை பிரார்த்தனை  செய்யப்பட்டது,  எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள்  ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறைநூல்கள் வாசிக்கப்பட்டன- போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்விக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை.உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப்பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ அவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறானோ அவர்களுடன் நீங்கள் ஒவ்வெரு செயலையும் பொறுத்தே தெய்விக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என்று நான் திட்டவட்டமாக உங்களுக்குக் கூறுகிறேன்.

உங்களுக்கு மனஅமைதி வேண்டுமா?


நல்லாரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே.
       
ஆனால், இவை இரண்டும் இருப்பினும், பலரும் தொடர்ந்து மன அமைதியின்றி அல்லல்படுகின்றனர். நீங்கள் இந்த வகையைச்   சேர்ந்தவர்களா?ஆமாம்  என்று நீங்கள் பதில் சொன்னால் மேலும் இதை படியுங்கள்.உங்களது தொல்லைகள் பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால், அவை தவிர்க்கப்படக் கூடியவையே. எப்படி என்று பார்ப்போம்.
http://vasantruban.blogspot.com/                                                                 



No comments:

Post a Comment