" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

06/06/2011


 வேறு யாரோ ஒருவரைவிட உயர்வாக இருப்பதில் சிறப்பு எதுவும் இல்லை. உன் பழைய காலத்திற்கு சிறப்பாக இருப்பதுதான் உண்மையான சிறப்பு.
 விழுவதில் இல்லை விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான் பெரும் சிறப்பு வெளிப்படும்.
  தன்னைத்தானே வெற்றி கொள்வதுதான் சாதனைகளில் சிறந்தது. இந்த வெற்றியை அறிந்தவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது.



  எப்போதுமே இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தோல்வி என்பது கீழே விழுவதல்ல கீழே இருப்பது.
  அடுத்தவரை வெற்றி கொள்பவன் பலசாலி ஆனால் தன்னைத்தானே வெற்றி கொள்பவன் சர்வ சக்தி உள்ளவன்.
  இறுக்கமான சூழலை எதிர் கொண்டு எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால், இன்னும் ஒரு நிமிடம் நீடிக்க முடியாது என்று தோன்றினாலும் கூட, கைவிட்டு விடாதீர்கள். ஏனெனில் அந்த இடத்தில் அந்த நேரத்தில்தான் வாழ்வு திசை திரும்புகிறது.
 மிகவும் தாழ்மையான உயரம்தான் அலை திசை மாறுவதைக் காட்டுகிறது.
  நம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும்.
 ஒருவன் அறிந்ததை சிறப்பாக செய்யாத ஒன்றுதான் வாழ்வில் தோல்வி.
  அடுத்தவர்களால் செய்ய முடியாததை நம்மால் செய்ய முடியும்..! அதுபோல அடுத்தவரால் தர முடியாததை நம்மால் தர முடியும்..! என்று உணர வேண்டும்.
  இன்று ஒரு புதிய நாள் நீங்கள் எதைத் தருகிறீர்களோ அதையே பெறுவீர்கள். நீங்கள் தவறு செய்தாலும் சோர்ந்துவிடாதீர்கள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.
 நீங்கள் கைவிட்டால் தவிர எப்போதும் நீங்கள் தோற்பதில்லை. எப்போது நீங்கள் நினைத்தாலும் புதிதாக ஆரம்பிக்கலாம்.
முற்றிலும் புதிதாக ஆரம்பிப்பது அவமானமில்லை அது ஒரு வாய்ப்பு.
  தோற்கவே முடியாது என்பதுபோல செயற்படுங்கள். இதுதான் சோர்வையும் எரிச்சலையும் குணப்படுத்த வல்லது. இதுதான் தோல்வியில் இருந்து உங்களை வெற்றிக்கு திருப்பும் சுக்கான் ஆகும்.
 

No comments:

Post a Comment