page18
மன அமைதியை பெருக்க முடியும்
உங்கள் மன அமைதியைப் பெருக்கிக் கொண்டே போக முயலுங்கள். இடையில் தயங்க வேண்டாம். மேலும் மேலான நிலைக்குப் போக முடியும். தயங்கி நின்றால்தான் மோசமானது. ஏனெனில் அது சில சமயங்களில் நிலைமையை மோசமாக்கிவிடும். உங்கள் அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்துங்கள். அகத்தேயுள்ள செல்வ நிலையே (மனநிறைவே) உண்மையான செழிப்பாகும். உங்கள் செல்வம் உள்ளே உருவாக்கப்படட்டும். உங்கள் குழந்தைகளின் செல்வம் அகத்தே உருவாக்கப்படட்டும். இது நிச்சயம் புறவாழ்விலும் செல்வத்தைக் கொணர்ந்துவிடும். ஒரு மனிதனை அவனது செயலால் தீர்மானிக்காது, அவன் எப்படி 'இருக்கிறான்' என்பதைக்கொண்டு தீர்மனிக்கவேண்டும் என்று ஆச்சார்யப் புருஷர்கள் சொல்கிறார்கள். அனைத்து லௌகீக ஆவல்களையும் விடுங்கள். அதன் இடத்தில் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய, துறவில் வளர்ச்சி அடைய விரும்பும் ஆவலை வளருங்கள். எல்லா சிறிய ஆசைகள் மற்றும் ஆவல்களை இந்த ஒரு இலட்சியத்தால் இடப்பெயர்ச்சி செய்யுங்கள்.
ஒரு முறையான இலட்சியத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டால், அதன்பின் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பியுங்கள்.உங்கள் சிந்தனை, சொல், செயலுக்கிடையே மேலும் மேலும் ஒற்றுமையைக் கொண்டு வாருங்கள்
.நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள். எல்லாப் போலித்தனத்தையும் விடுங்கள்.உங்கள் வாழ்விலிருந்து எல்லாப் போலித்தனத்தையும் அகற்றுங்கள். மன அமைதியின் முக்கிய பகைவன் போலித்தனமேயாகும்.
ஒரு முறையான இலட்சியத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டால், அதன்பின் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பியுங்கள்.உங்கள் சிந்தனை, சொல், செயலுக்கிடையே மேலும் மேலும் ஒற்றுமையைக் கொண்டு வாருங்கள்
.நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள். எல்லாப் போலித்தனத்தையும் விடுங்கள்.உங்கள் வாழ்விலிருந்து எல்லாப் போலித்தனத்தையும் அகற்றுங்கள். மன அமைதியின் முக்கிய பகைவன் போலித்தனமேயாகும்.
No comments:
Post a Comment