page23
நாம் சண்டை புரியலாமா?
போரிட வேண்டாம். எதிர்க்க வேண்டாம். கடவுளின் இச்சையால் உங்களை உருவாக்க விட்டுவிடுங்கள். ஊழிப்பெரும் காற்றில் நீங்கள் ஒரு துரும்பாக ஆகிவிடுங்கள். தனிப்பட்ட ஆணவம் வேண்டாம். கடவுள் இருக்கிறார். அவரது இச்சை செயல்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்தால்தான், மனிதனுடைய அனைத்து முயற்சிகளை இயக்குவது கடவுளின் இச்சாசக்தியே என்பதை நீங்கள் உணர்ந்தால்தான், இவ்வாறு நீங்கள் ஆக முடியும்.
பணிவு பலவீனம் அல்ல. அதுவே பலம். பணிவு அதிகமானால் சக்தியும் அதிகரிக்கும். கடவுளது இச்சைக்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்காததால் உங்களது வாழ்க்கையும் அமைதியாகச் செல்லும். அதில் எந்தவித சிக்கலும் இராது. உங்கள் விருப்பம் மற்றும் முயற்சியால் நீங்கள் எதையும் சாதிப்பது என்பது இல்லையாதலால் அங்கே எவ்வித தோல்வியும் இராது. வெற்றிடத்தை நோக்கி காற்று பாய்வது போல் ஆணவம் அகன்ற உங்களுக்குள்ளே இறை அருள் மற்றும் அமைதி பெருகுவதால் உங்கள் வாழ்க்கை மிகப் பெரும் வெற்றியாக மாறி அமையும். இது உறுதி!
No comments:
Post a Comment